Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தைச் சேர்ந்த வீராங்களை சர்வதேச யோகா போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச யோகா போட்டி தாய்லாந்தில் நடந்தது. இதில் 17 நாடுகளை சேர்ந்த யோகா போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள் தலா 25 பேர் பங்கேற்றனர்.
இதில் குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த மதுமிதா, அங்கு நடந்த ஐந்து பிரிவுகளிலான போட்டிகளில் பங்கேற்று, மூன்று போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
இவர் சர்வதேச யோகா நடுவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, சர்வதேச நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.
நவ 27, 28ல் கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான யோகா போட்டியில், தமிழ்நாடு அரசின் யோகா பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் 40 போட்டியாளர்களில், 25 பேர் அரவிந்த் யோகா பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சாதனை படைத்த மதுமிதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.